உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.1.60‍ கோடிக்கு வியாபாரம்

புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.1.60‍ கோடிக்கு வியாபாரம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்-வாய்க்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கி-றது. இந்த சந்தைக்கு, நவணி, சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வாரந்-தோறும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள், லாரிகளில் மாடுகளை மொத்தமாக வாங்கி சந்தைக்கு விற்-பனைக்கு கொண்டு வருகின்றனர்.நேற்று நடந்த மாட்டு சந்தையில் மாடுகள் விற்-பனை குறைந்தது. இதனால், கடந்த வாரம் 2 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்த நிலையில், நேற்று, 1.60 கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை