மேலும் செய்திகள்
பட்டுக்கூடு ஏலம்
02-Aug-2024
ராசிபுரம்: ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், ரூ.1.04 லட்சம் ரூபாய்க்கு பட்டுக்கூடு விற்பனையானது.ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 180 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ, 600 ரூபாய், குறைந்தபட்சமாக, 550 ரூபாய், சராசரியாக கிலோ, 580.06 ரூபாய்க்கு விற்பனையா-னது. மொத்தம், 180 கிலோ பட்டுக்கூடு, 1.04 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
02-Aug-2024