மேலும் செய்திகள்
வாக்காளர் சரிபார்ப்பு பணி தொடக்கம்
21-Aug-2024
சேலம், ஆக. 30-சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதி வரைவு வாக்காளர் சுருக்கமுறை திருத்த பட்டியலை, கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி நேற்று வெளியிட்டார்.இதுகுறித்து பிருந்தாதேவி கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள, 3,257 ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, 7 ஓட்டுச்சாவடிகள் உருவாக்க, 30 சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்ய, 10 சாவடிகளை இடமாற்ற, 19 சாவடிகளின் கட்டடத்தை மாற்ற, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது. இந்த அலுவலர்கள் பரிந்துரை மீது ஆட்சேபனை, புது ஆலோசனை இருப்பின், செப்., 4 மாலை, 5:00 மணிக்குள், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்கலாம். அதை விதிமுறைக்குட்பட்டு பரிசீலித்து இறுதி செய்து இந்திய தேர்தல் கமிஷன் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்படும். மேலும், 2025 ஜன., 1 தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 29ல் வெளியிடப்பட உள்ளது. தவிர ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். அதன்படி வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய ஜன., 1, ஏப்., 1, ஜூலை, 1, அக்., 1 ஆகியவற்றை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யலாம். 17 வயது நிரம்பியவர், முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போரின் வயது, 18 பூர்த்தியாகும் அடுத்த காலாண்டில் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவசுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
21-Aug-2024