உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உழவர் சந்தையில் 55 டன் காய்கறி விற்பனை

உழவர் சந்தையில் 55 டன் காய்கறி விற்பனை

நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 55 டன் காய்-கறிகள், 21.44 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.நாமக்கல், கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்-களில் விளைந்த காய்கறிகள், பழங்களை கொண்டு வந்து நேரடி-யாக விற்பனை செய்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்-களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகளவில் வாடிக்கையா-ளர்கள் உழவர் சந்தை வந்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.அதன்படி, நேற்று விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 205 விவசாயிகள், 47,460 கிலோ காய்கறிகள், 7,705 கிலோ பழங்கள், 15 கிலோ பூக்கள் என மொத்தம், 55,190 கிலோ விளைபொருட்கள் கொண்டுவந்து விற்பனை செய்தனர். அவற்றை, 11,038 பேர் வாங்கி சென்றனர். அதன் மூலம், 21 லட்சத்து, 44,550 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி ஒரு கிலோ, 17 ரூபாய், கத்தரி, 25, வெண்டை, 32, புடலங்காய், 30, சின்ன வெங்காயம், 48, பெரிய வெங்காயம், 50, பூண்டு, 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !