உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு தட்டச்சு தேர்வு துவக்கம்

அரசு தட்டச்சு தேர்வு துவக்கம்

குமாரபாளையம்: குமாரபாளையம், ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லுாரியில் தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி துறை சார்பாக, இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நேற்று துவங்கியது.இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இத்-தேர்வில், 34க்கு மேற்பட்ட தட்டச்சு பயிற்சி நிறுவனங்களில் இருந்து, 345 மாணவர்களும், 1,403 மாணவிகளும் பங்கேற்றனர்.தேர்வில் முந்தைய ஆண்டை விட, 425க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிகளவில் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் விஜயகுமார், தேர்வு முதன்மை கண்காணிப்பாளராக பொறுப்பேற்று தேர்வை கண்காணித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை