தட்டான்குட்டை ஊராட்சியில் மகளிர் குழு மண்டபம் திறப்பு
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகரில் மகளிர் சுய உதவிக்குழு மண்டபம் திறப்பு விழா வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலர்கள் செந்தில், கும-ரேசன், ஊராட்சி தலைவி புஷ்பா தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசியதாவது:இந்த மண்டபம் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்-ளது. இப்பகுதியில், வாய்க்கால் நீர் வராவிட்டால் தண்ணீர் பஞ்சம் வந்துவிடுகிறது. அதை சரி செய்ய வேண்டி, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கொடுத்தார். அதன்படி, மேட்டூர் அருகே இருந்து காவிரி நீர் எடுத்து, தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இவ்வாறு பேசினார்.மேலும் இதே பகுதியில் சுகாதார வளாகம், மேல்நிலைத்-தொட்டி, குப்பாண்டபாளையம் பகுதியில் புதிய சாலைகள், சுகா-தார வளாகம், தானியக் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை திறந்து வைத்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் செல்-லமுத்து, பி.டி.ஓ., பிரகாஷ், பொறியாளர் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.