உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கழிவறையில் மயங்கி விழுந்து மாணவர் பலி உறவினர்கள் மறியல்; போலீசார் விசாரணை

கழிவறையில் மயங்கி விழுந்து மாணவர் பலி உறவினர்கள் மறியல்; போலீசார் விசாரணை

ராசிபுரம்: அரசு பள்ளி மாணவர் கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எல்.ஐ.சி., பகுதியை சேர்ந்த பிரகாஷ் மகன் கவின்ராஜ், 14. இவர், புதுப்பாளையம் சாலையில் உள்ள சிவானந்தா சாலை அரசு மேல்நிலை பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, கவின்ராஜ், பள்ளிக்கு சென்றார். காலை, 11:30 மணிக்கு, கழிவறைக்கு சென்ற மாணவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த சக மாணவர்கள், கழிவறைக்கு சென்று பார்த்தபோது, கவின்ராஜ் மயங்கி கிடந்துள்ளார்.உடனடியாக அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகு-றித்து, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது மாணவர் கவின்ராஜை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை. அதனால், கடும் வாக்குவா-தத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். தொடர்ந்து, மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, டி.இ.ஓ., கற்பகம், டி.எஸ்.பி., விஜயகுமார், ராசிபுரம் இன்ஸ்-பெக்டர் சுகவனம், தாசில்தார் சரவணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி என, கல்வி, காவல், வருவாய் மற்றும் சுகாதாரத்துறையினர், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரி-யர்கள், சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக, ராசிபுரம் போலீசாரின் முதற்கட்ட விசா-ரணையில், உயிரிழந்த மாணவன் உடலில் ரத்த காயங்கள் இருந்-தது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த, 21, 24ல் பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நேற்றும் நடந்துள்ளது. இந்நிலையில் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சம்பந்-தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி, ராசிபுரம் அரசு மருத்துவ-மனை மற்றும் எல்.ஐ.சி., அருகே, 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், ராசிபு-ரம்-நாமக்கல்-ஈரோடு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்-பட்டது. போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி, போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ