உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டுக்கூடு 121 கிலோ ரூ.83,000க்கு விற்பனை

பட்டுக்கூடு 121 கிலோ ரூ.83,000க்கு விற்பனை

ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 121 கிலோ பட்டுக்கூடு விற்-பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 750 ரூபாய், குறைந்த பட்சம், 550 ரூபாய், சராசரி, 683 ரூபாய் என, 121 கிலோ பட்-டுக்கூடு, 83,000 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ