உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 15 மாதத்தில் 2,407 சைபர் குற்ற வழக்குகள் பதிவுரூ.14.75 கோடி மோசடி: நாமக்கல் எஸ்.பி., தகவல்

15 மாதத்தில் 2,407 சைபர் குற்ற வழக்குகள் பதிவுரூ.14.75 கோடி மோசடி: நாமக்கல் எஸ்.பி., தகவல்

15 மாதத்தில் 2,407 சைபர் குற்ற வழக்குகள் பதிவுரூ.14.75 கோடி மோசடி: நாமக்கல் எஸ்.பி., தகவல்நாமக்கல்:''மாவட்டத்தில், கடந்த, 15 மாதங்களில், சைபர் குற்றங்கள் தொடர்பாக, 2,407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், 14.75 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது,'' என, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் கூறினார்.இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சைபர் குற்றம் நடந்த பின், குற்றவாளிகளை கண்டறிந்து பணத்தை மீட்பது சவாலாக உள்ளது. அதனால், பொதுமக்கள் சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்க, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதற்காக, மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அப்படி இருந்தும், ஆன்லைன் டிரேடிங், திட்டங்களில் முதலீடு, இரட்டை பணம், டாஸ்கை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சைபர் குற்றங்கள் அரங்கேறுகின்றன.இதுபோன்ற வழிகளில் பணத்தை இழந்தால், உடனடியாக, '1930' என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், இழந்த பணம் அல்லது பொருளை பிளாக் செய்து நிறுத்தி வைக்க முடியும். பொதுமக்கள் பணத்தை ஆன்லைன் மூலம் இழந்தால், போலீஸ் ஸ்டேஷன் வருவதற்கு முன், '1930' என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மொபைல் திருட்டு நடந்தால் www.pothalails என்ற இணையதளத்தில், நம்பரை கொடுத்தால் உடனடியாக மொபைலை லாக் செய்துவிட முடியும்.நாமக்கல் மாவட்டத்தில், 2024ல், 1,907 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 14.75 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அவற்றில், மூன்று கோடி ரூபாய் அளவிற்கு பணம் பிளாக் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 85 லட்சம் ரூபாய் திரும்ப பெறப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தாண்டில் இதுவரை, 500 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, நாளொன்றுக்கு, ஐந்து சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள், இளைஞர்கள் இணையதள மோசடி அழைப்புகளை நம்பாமல், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சைபர் குற்றத்தில் இழந்த பணத்தை மீட்பது பெரும் சவாலாக உள்ளதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ