மேலும் செய்திகள்
பட்டுக்கூடு ஏலம்
08-Jan-2025
ராசிபுரம்: ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 283 கிலோ பட்டுக்கூடு, 1.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.ராசிபுரத்தில் உள்ள, கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையத்தில், தினமும் பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, விவசாயிகள் ராசிபுரம் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 283 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சமாக கிலோ, 650 ரூபாய் குறைந்தபட்சமாக, 575 ரூபாய்க்கு விற்பனையானது. 283 கிலோ பட்டுக்கூடு, 1.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக கிலோ, 621 ரூபாய்க்கு விற்பனையானது.
08-Jan-2025