உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வேலைவாய்ப்பு முகாமில் 54 பேருக்கு பணி ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் 54 பேருக்கு பணி ஆணை

நாமக்கல், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேற்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. அதில், 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.தனியார்துறை நிறுவனங்களும், -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் - மோகனுார் சாலையில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமையில் நடந்தது.அதில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து,19 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட, 164 பட்ட தாரிகள் பங்கேற்றனர். அதில், 54 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமனை ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ