உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டுக்கூடு 86 கிலோ ரூ.57,000க்கு விற்பனை

பட்டுக்கூடு 86 கிலோ ரூ.57,000க்கு விற்பனை

ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 86 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 700 ரூபாய், குறைந்தபட்சம், 671 ரூபாய், சராசரி, 673 ரூபாய் என, 86 கிலோ பட்டுக்கூடு, 57,000 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி