மேலும் செய்திகள்
வேளாண் சந்தையில்தேங்காய் விலை உயர்வு
16-Apr-2025
ப.வேலுார்:-ப.வேலுார் தேசிய வேளாண்மை சந்தையில், தேங்காய் விலை சரிந்து விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் தேங்காய் ஏலம் நடக்கிறது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தேங்காய்களை ஏலம் எடுக்க, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளிமாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். கடந்த வாரம் நடந்த ஏலத்தில், அதிகபட்சம் தேங்காய் கிலோ, 58.29 ரூபாய், குறைந்தபட்சம், 37.30 ரூபாய், சராசரி, 57.19 ரூபாய் என, 10,200 தேங்காய்கள், ஒரு லட்சத்து, 97,000 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில், அதிகபட்சம் கிலோ, 55.55 ரூபாய், குறைந்தபட்சம், 35.29 ரூபாய், சராசரி, 52.52 ரூபாய் என, 18,793 தேங்காய்கள், இரண்டு லட்சத்து, 62,000 ரூபாய்க்கு விற்பனையானது.
16-Apr-2025