ரூ. 14 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம்
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. அதன்படி நேற்று மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர்.கடந்த வாரம் ஏலத்திற்கு, 4,725 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, ரூ.216.90, குறைந்தபட்சமாக, ரூ.180.99, சராசரியாக ரூ.207.99க்கு ஏலம் போனது. மொத்தம், ரூ.8 லட்சத்து 78 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 7,194 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, ரூ.212.10, குறைந்தபட்சமாக, ரூ.195.10, சராசரியாக, ரூ.207.99க்கு ஏலம் போனது. மொத்தம், 14 லட்சத்து 3,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது