உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.2 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ரூ.2 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்:ராசிபுரம் சுற்று வட்டாரத்தில், பருத்தி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இப்பகுதியில் உள்ள பருத்தியை விவசாயிகளிடம் இருந்து வாங்கி, ஏல முறையில் வியாபாரிகளுக்கு ஆர்.சி.எம்.எஸ்., என்ற ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் விற்பனை செய்து வருகிறது. ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. 85 மூட்டை பருத்தி விற்பனைக்கு வந்திருந்தது. இதில், ஆர்.சி.எச்., ரகம் குறைந்தபட்சம், 6,809 ரூபாய், அதிகபட்சம், 7,599 ரூபாய்க்கு விற்பனையானது. கொட்டு ரகம் மற்றும் டி.சி.எச்., ரகம் விற்பனைக்கு வரவில்லை. 85 மூட்டை பருத்தி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி