ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை
புதுச்சத்திரம், டிச. 18-புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, வேலகவுண்டம்பட்டி, நாமக்கல், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து, வாரந்தோறும் ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதியில் பெய்த மழையால், நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து வெகுவாக குறைந்திருந்தது.இதனால், நேற்று நடந்த மாட்டு சந்தையில், 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.