உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

நாமக்கல்: தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழகம் முழுதும், மாவட்ட அளவில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், நாமக்கல் ஒன்றியம், தாத்திபாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவி தக் ஷனா, ஓ.சவுதாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரஞ்சித்குமார்.குப்புச்சிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர் மணிஷ் கார்த்திக், மாணவி ஹரிணி பிரிஷா, வெள்ளக்கல்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவி தவப்பிரியா ஆகிய, ஐந்து அரசு பள்ளி மாணவர்கள், 1,330 குறட்பாக்களையும் ஒப்புவித்து போட்டியில் தேர்ச்சி பெற்றனர்.மாநில அளவில் முற்றோதல் போட்டியில் தேர்ச்சிபெற்ற, 147 அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா, திருப்பூரில் நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று, திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, 15,000 ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ILANGOVAN
செப் 24, 2024 12:56

திருக்குறளை மாணவர்களிடையே எடுத்துச்செல்ல பெரிதும் உதவியாக இருக்கும். மனமார்ந்த நன்றிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை