நாட்டுக்கோழி விலை உயர்வு
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான் பேட்டையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கி-ழமை நாட்டுக்கோழி வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று கூடிய நாட்டுக்கோழி வாரச்சந்தையில் பரமத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பா-ளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வந்-தனர். ப.வேலுார் பகுதி முழுதும் விவசாயிகள், தொழிலாளர் நிறைந்த பகுதியாகும். ஞாயிறு விடுமுறை என்பதால், மட்டன், சிக்கன் அதிகளவு விற்பனையாகும்.குறிப்பாக, அனைத்து கோழிக்கறி கடைகளிலும் கூட்டம் அதிக-ளவு இருக்கும். இதில், நாட்டுக்கோழி விற்பனை முக்கிய இடம் பிடிக்கும். கடந்த வாரம், நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாயக்கு விற்றது. தற்போது, கிலோவுக்கு, 200 ரூபாய் கூடுதலாகி, 600 ரூபாய்க்கு விற்றதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.