உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு

தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்-புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்-ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 535 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, நுகர்வு அதிகரித்துள்-ளதால், முட்டை கொள்முதல் விலை, மூன்று நாட்களில், 15 காசு உயர்ந்துள்ளது. இது, பண்-ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 585, ஹைத-ராபாத், 530, விஜயவாடா, 555, பர்வாலா, 521, மும்பை, 600, மைசூரு, 582, பெங்களூரு, 580, கோல்கட்டா, 600, டில்லி, 545 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்-பட்டு வந்த முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்லடத்தில் நடந்த உற்பத்தி-யாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், ஒரு கிலோ, 111 ரூபாய்க்குவிற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை