உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், 'வரும், 29ல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும், 29 காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி