ரூ.15 லட்சத்துக்கு ஆடு விற்பனை
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் திங்கள் தோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, எருமப்பட்டி, முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.தற்போது, எருமப்பட்டி, தேவராபுரம், முசிறி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடப்பதால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வாங்கி செல்ல ஏராளமான வியாபாரிகள் வந்தனர். இதனால், ஆடு விற்பனை அதிகரித்து, 15 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.