உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேங்காய் பருப்பு விலை உயர்ந்ததால் மகிழ்ச்சி

தேங்காய் பருப்பு விலை உயர்ந்ததால் மகிழ்ச்சி

தேங்காய் பருப்பு விலைஉயர்ந்ததால் மகிழ்ச்சிப.வேலுார், நவ. 22--தேசிய வேளாண்மை சந்தையில், தேங்காய் பருப்பு கிலோவுக்கு, ஆறு ரூபாய் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த ஏலத்துக்கு, 8,650 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 147.10, குறைந்தபட்சமாக, 120.99, சராசரியாக, 138.83 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் எட்டு லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட தேங்காய் பருப்பு கிலோவுக்கு, ஆறு ரூபாய் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !