அறுவடை செய்த மக்காச்சோளம் உலர்த்தும் பணி துவக்கம்
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த ராமநாதபுரம் புதுார், கருவாட்டாறு, வெண்டாங்கி, காரவள்ளி பகுதியில் விவசாயிகள் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை செய்த மக்காச்சோளத்தை வெயிலில் கொட்டி உலர்த்தி வருகின்றனர். மக்காச்சோளம் உற்-பத்தியைவிட தேவை அதிகரித்துள்ளதால் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகி-றது. இதனால், விவசாயிகள் அதிக வருமானம் தரும் மக்காச்-சோள ரகங்களை பயிரிட்டு வருகின்றனர்.இதுகுறித்து, கருவாட்டாறு பகுதியை சேர்ந்த விவசாயி சாந்தி கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறேன். ஏக்கருக்கு, 5 கிலோ விதை நடவு செய்ய தேவைப்படும். 110-120 நாட்களில் அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு, மூன்று முறை மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்-கிறோம். விதை நடவுக்கு பின்னர் களைக்கொல்லி அடிக்கப்-படும். இருமுறை உரம் வைத்து தொடர்ந்து தண்ணீர் மட்டும் பாய்ச்சப்படும். பராமரிப்பு செலவு குறைவுதான். கடந்த ஜன.,ல் குவிண்டாலுக்கு, 2,350 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 2,450 ரூபாயாக அதிகரித்துள்ளது,'' என்றார்.