உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதுச்சத்திரம், ராசிபுரம், மோகனுாரில் கனமழை ஒரே நாளில் 173.60 மி.மீ., பதிவு; மக்கள் மகிழ்ச்சி

புதுச்சத்திரம், ராசிபுரம், மோகனுாரில் கனமழை ஒரே நாளில் 173.60 மி.மீ., பதிவு; மக்கள் மகிழ்ச்சி

நாமக்கல்: புதுச்சத்திரம், ராசிபுரம், மோகனுாரில் கொட்டி தீர்த்த கனமழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்-தனர். மாவட்டத்தில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 173 மி.மீ., மழை பெய்துள்ளது.நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. அதன் காரணமாக, பொது-மக்கள் பலரும் புழுக்கத்தில் அவதிப்பட்டனர். சில நேரம், வானம் மேகமூட்டத்துடன் காணப்-படும். அதனால், மழை வரும் என எதிர்பார்த்தி-ருப்பர். அவ்வப்போது மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய செய்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை-யடுத்து, இரவு, 7:00 மணிக்கு, லேசாக மழை பெய்ய துவங்கி பின், கனமழையாக மாறியது. அதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்-ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும், திடீர் மழை காரணமாக, பலரும் நனைந்-தபடி செல்வதை காணமுடிந்தது. ஒரு சிலர் குடை பிடித்துக் கொண்டும், ஒரு சிலர் ஜெர்கின் அணிந்தும், மழையிலும் தங்கள் பணியில் ஈடு-பட்டனர்.நேற்று முன்தினம், மாவட்டம் முழுவதும், 173.60 மி.மீ., மழை பெய்தது. குறிப்பாக, புதுச்சத்திரம், ராசிபுரம், மோகனுார் பகுதியில் கனமழை பெய்-தது. நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:எருமப்பட்டி, 15, மங்களபுரம், 2.60, மோகனுார், 34, நாமக்கல், 12, ப.வேலுார், 4, புதுச்சத்திரம், 42, ராசிபுரம், 37, சேந்தமங்கலம், 7, கலெக்டர் அலுவ-லகம், 8, கொல்லிமலை, 12 என, மொத்தம், 173.60 மி.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ