உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாடுகள் வரத்து அதிகரிப்பு ரூ.3 கோடிக்கு வியாபாரம்

மாடுகள் வரத்து அதிகரிப்பு ரூ.3 கோடிக்கு வியாபாரம்

சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் ஒன்றியம், புதன் சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை கூடுகிறது. திங்கள் இரவு தொடங்கி செவ்வாய் மதியம் வரை நடக்கிறது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், மாடுகளை வாங்கவும், விற்கவும் விவசாயிகள், வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையால், மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.ஆந்திர, கர்நாடகா, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இருந்து பால் மாடுகள், இறைச்சி மாடுகளை அதிகளவில் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். கேரளா, ஆந்திரா, தமிழக உள் மாவட்டங்களில் இருந்து மாடுகளை வாங்க வந்திருந்த வியாபாரிகள் எண்ணிக்கையும் இந்த முறை அதிகரித்து காணப்பட்டது. இதனால், 3 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !