உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆடு விற்பனை அதிகரிப்பு

ஆடு விற்பனை அதிகரிப்பு

எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே, பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எருமப்பட்டி யூனியனை சுற்றியுள்ள கிராமங்களில் சித்திரை மாத மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இதனால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், ஆடுகள் விற்பனை அதிகரித்து, 15 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !