உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாக்கடையில் விழுந்த கூலி தொழிலாளி பலி

சாக்கடையில் விழுந்த கூலி தொழிலாளி பலி

எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார், 36; கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு போடிநாய்க்கன்பட்டியில் உள்ள சாக்கடை கால்வாய் திண்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, சிவக்குமார் எதிர்பாராத விதமாக, 10 அடி ஆழத்தில் உள்ள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !