உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சரக்கு ஆட்டோ மோதி கூலி தொழிலாளி பலி

சரக்கு ஆட்டோ மோதி கூலி தொழிலாளி பலி

மோகனுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, மோகனுாரில் உள்ள உறவினர் வீட்டில், மனைவி மற்றும் பேரக்குழந்தைகளை விட்டு விட்டு, டி.வி.எஸ்., ஸ்கூட்டரில், ப.வேலுார் நோக்கி சென்று கொண்-டிருந்தார்.அப்போது, மணப்பள்ளி சுடுகாட்டு பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவரை, அக்கம் பக்-கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ