வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புநாமக்கல், நவ. 19--புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, நேற்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டுக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி என அனைத்து பகுதிகளிலும், 1,200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றங்களில் வழக்கமாக நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டன.