வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு - சங்ககிரி ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 250க்கும் மேற்பட்ட வக்கீல்கள், ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், தமிழகத்தில் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 'லிப்ட்' வசதியை விரைந்து முடிக்க வேண்டும். கோர்ட் வளாகத்தில் கிளை அஞ்சலகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.