உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மகேந்திரா பொறியியல் கல்லுாரியில் சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்ப மாநாடு

மகேந்திரா பொறியியல் கல்லுாரியில் சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்ப மாநாடு

நாமக்கல், அக். 27-நாமக்கல் மகேந்திரா பொறியியல் கல்லுாரியில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை சார்பில், 'சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பம்' என்ற தலைப்பில், 2 நாட்கள் சர்வதேச மாநாடு நடந்தது. கோயம்புத்துார், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இணை இயக்குனர் தினேஷ்குமார் சுப்ரமணியன், சிறப்ப விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''சேர்க்கை உற்பத்தி என்பது இயந்திர பொறியியலுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; செயற்கை நுண்ணறிவு உதவி, இன்டர்நெட் ஆப் திங்ஸ் அடிப்படையிலான, 3டி பிரின்டிங்கில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பல திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். பொறியாளர்கள் சாய் பிரசாத், வெங்கடேஷ், கோவை சி.டி.எஸ்., முதுநிலை மேலாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில், 286 ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டன. அதில், 85 கட்டுரைகள் விளக்க காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. விழாவில், சிறந்த தாள்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கல்லுாரி நிறுவன தலைவர் பரத்குமார், மாநாட்டை துவக்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டார். இந்த மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து, நிர்வாக இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், முதல்வர் இளங்கோ பேசினர். ஒருங்கிணைப்பாளர் செல்வராஜன், இயந்திரவியல் துறை பேராசிரியர் ஆகியோர், அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ