சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அமைச்சு பணியாளர்கள்
நாமக்கல்: பனிரெண்டு ஆண்டுகளுக்கு பின், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றும், நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தும், அமைச்சு பணியாளர்கள், நாமக்கல்லில் கூட்டம் நடத்தினர். அதில், தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்துள்ள, 2,000 பேர் அமைச்சு பணி-யாளர்களாக பணியாற்றி வருகின்றனர். 2012 முதல், 2025 வரை அவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்பட-வில்லை.இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், பணியிடம் வழங்-கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மார்ச், 21ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழகரசு, கல்வித்துறை அலுவலகங்களில் உள்ள அமைச்சு பணியாளர்களுக்கு, அரசு பள்ளிகளில், 2 சதவீத அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியி-டங்களை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.முதல் கட்டமாக, 747 பணியிடங்கள் நிரப்பவும் அறிவுறுத்தப்பட்-டுள்ளது. 2,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அமைச்சு பணியாளர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும், 12 ஆண்டுகளுக்கு பின், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றும், நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சு பணியாளர்கள் பங்கேற்ற கூட்டம் நாமக்-கல்லில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஜெயரத்தினகாந்தி தலைமை வகித்தார். இதில், ஆசிரியர் பணியிட வாய்ப்பை பெறும் அமைச்சு பணியாளர்கள் பங்கேற்று தங்களுடைய கருத்-துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.