மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
23-Jul-2025
எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் யூனியன், வண்டிநத்தம் கிராமத்தில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தேசிய ஊரக தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நிர்வாகிகள் கிருஷ்ணன், ராமன் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயராமன், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் பூமாலை பேசினர்.அதில், 100 நாள் வேலைதிட்ட பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்காமல், 100 நாள் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். அரசு அறிவித்த, 336 ரூபாய் சம்பளத்தை நாள் ஒன்றுக்கு வழங்க வேண்டும். வண்டிநத்தம் கிராமத்தில் குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படும் சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இப்பகுதியில் பல மாதங்களாக நிலவி வரும் குடிநீர் பிரச்னையை சரிசெய்து, இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
23-Jul-2025