திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் உள்ள, 1,000 ஆண்டு பழமையான சோழீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி கோவிலில், நேற்று முன்-தினம் விஜயதசமி மற்றும் நவராத்திரி நிறைவு நாளையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.