சந்தோஷி அம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு யாகம்
சந்தோஷி அம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு யாகம்குமாரபாளையம், அக். 12-நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. இதேபோல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.நேதாஜி நகர் சந்தோஷிஅம்மன் கோவிலில், வட மாநில முறையில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு, சிறப்பு யாகம், வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.