ப.வேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது. இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார் மற்றும் ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும், நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டிடு வாங்கி செல்வர்.கடந்த வாரத்தைவிட இந்த வாரம் கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 600 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று, 500 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, வைகாசி பிரதோஷம், திருமண சுப நிகழ்ச்சிகளால் பொதுமக்கள் அசைவத்தை தவிர்த்தனர். அதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது.