| ADDED : ஜூலை 15, 2024 01:10 AM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், ப.வேலுார் சுல்தான்பேட்டையில் சாக்-கடை வடிகால் வசதி ஏற்படுத்த, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகள் விரைவாக நடந்து வந்தன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணைத்தலைவ-ராக ராஜாவும் உள்ளனர். இந்நிலையில் சாக்கடை கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது.இதற்கு காரணம், சாக்கடை கால்வாய் செல்லும் பகுதியில் சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி கடைகள் அமைத்துள்ளனர். சாக்கடை அமைத்தால், கடைகளை அப்புறப்படுத்த நேரிடும் என்-பதால், எதிர்ப்பு தெரிவித்து பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்-டன. தற்போது, சாக்கடை அமைக்க வேண்டிய குழியை மூடிவிட்-டனர். இதுகுறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியி-டப்பட்டது.இதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட மண்டல உதவி செயற்-பொறியாளர் பழனி, ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் வீரமணி ஆகியோர் சுல்-தான்பேட்டை சாக்கடை வடிகால் பகுதிகளை, நேற்று முன்-தினம் ஆய்வு செய்தனர். அப்போது, 'ஆக்கிரமிப்புகளை தாங்களா-கவே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு சாக்-கடை அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும்' என தெரிவித்-தனர்.