மேலும் செய்திகள்
அஞ்சல் குறைதீர் முகாம்
13-Sep-2025
நாமக்கல்: நாமக்கல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா, வெளியிட்ட அறிக்கை:அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள், 'குறை தீர்க்கும் நாள்' கூட்டம் வரும், 16, காலை, 11:00 மணிக்கு நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது.அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள், தங்களுக்கு சேவை பெறு-வதில் குறைகள் ஏதேனும் இருந்தால், புகார்களை 'அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், நாமக்கல் கோட்டம், நாமக்கல்- 637001' என்ற முகவரிக்கு வரும், 14க்குள் அனுப்ப வேண்டும்.புகார் அனுப்பும் அஞ்சலக உறையின் மீது, 'அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு' என எழுத வேண்டும். நேரடியாகவும் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம். புகார் கடி-தத்தில் முழு தகவல்களை குறிப்பிட வேண்டும். அனுப்பும் முக-வரி, அனுப்பிய முகவரி, ரெஜிஸ்டர் தபால், ஸ்பீடு போஸ்ட், மணியார்டர் எண், எந்த அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்-டது, அனுப்பப்பட்ட தேதியை குறிப்பிட வேண்டும்.புகார்கள், சேமிப்பு கணக்கில் (அ) அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் இருப்பின், அதன் கணக்கு எண், பி.எல்.ஐ., ஆர்.பி.எல்.ஐ., நெம்பர், முகவரி மற்றும் எந்த அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்-படுகிறது ஆகிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13-Sep-2025