விசைத்தறி டெக்னீஷியன் வாகனம் மோதி பலி
குமாரபாளையம், ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 38; நவீன விசைத்தறி டெக்னீஷியன். இவர், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, குமாரபாளையம் அருகே சாணார்பாளையம் பகுதியில், 'டி.வி.எஸ்., போனிக்ஸ்' டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சாலையில் இறந்து கிடந்தார். குமாரபாளையம் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.