மக்கள் குறைதீர் கூட்டம்: 476 மனுக்கள் வழங்கல்
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு, 476 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 11 பேருக்கு, மூளை பக்கவாதத்திற்கான சக்கர நாற்காலி, மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு சேர்கள் என, 93,400 ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மேலும், குறைதீர் கூட்டத்திற்கு வரும் பொது-மக்களுக்கு, இலவசமாக மனு எழுதி கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும், கோகுல்நாதா மிஷன்ஸ் கல்லுாரி, விவேகானந்தா மகளிர் கல்-லுாரி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவியர், அலுவ-லர்களை பாராட்டி, கலெக்டர் சான்றிதழ் வழங்-கினார். டி.ஆர்.ஓ., சரவணன், துணை கலெக்டர் சுந்தரராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி, ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.