உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரேஷன் குறைதீர் முகாம் 95 மனுக்களுக்கு தீர்வு

ரேஷன் குறைதீர் முகாம் 95 மனுக்களுக்கு தீர்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் போன் எண் பதிவு மற்றும் பொது வினி-யோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி மேற்கொள்ள, பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், ஒவ்வொரு மாதமும், இரண்டா-வது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.அதன்படி, இம்மாதத்திற்கான பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் என, எட்டு தாலுகா அலுவல-கத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடந்தது. நாமக்கல் தாலு-காவில், வட்ட வழங்கல் தாசில்தார் கோவிந்தசாமி தலைமையில் நடந்த முகாமில், ஏராளமானோர் மனுக்களை அளித்தனர். மாவட்டம் முழுவதும், 8 தாலுகாவில் நடந்த முகாமில், 95 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்-டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை