உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நாமக்கல்லில் காத்திருப்பு போராட்டம்

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நாமக்கல்லில் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். வட்ட தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்புபடி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இந்த காத்திருப்பு போராட்டம், நேற்று பகல், 3:00 முதல், மாலை, 6:00 மணி வரை நீடித்தது.அதேபோல், மோகனுார் தாலுகா அலுவலகத்தில், வட்ட தலைவர் கணபதி தலைமையில், 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். * திருச்செங்கோடு வட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சங்க மாநில செயலாளர் செங்கமலை தலைமை வகித்தார். வட்டார தலைவர் கார்த்திகேயன், வட்டார செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை