உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புகையிலை பொருள் விற்பனை மளிகை கடைக்கு சீல் வைப்பு

புகையிலை பொருள் விற்பனை மளிகை கடைக்கு சீல் வைப்பு

புகையிலை பொருள் விற்பனைமளிகை கடைக்கு 'சீல்' வைப்புப.வேலுார், நவ. 29--நல்லுார் கந்தம்பாளையம் பகுதிகளில், சில தினங்களுக்கு முன்பு போலீசார் டீக்கடை, மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மளிகை கடையில் ஒன்பது கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.நல்லுார் கந்தம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இவ்வழக்கு தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் நல்லுார் போலீசார் குட்கா விற்ற மளிகை கடைக்கு நேற்று, 'சீல்' வைத்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், 21 நாட்களுக்கு கடை திறக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை