உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல்: சாலை பாதுகாப்பு மன்றம் மற்றும் போதைப் பொருள் தடுப்புக்-குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம், நாமக்கல்லில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அதில் அவர் பேசுகையில், ''சாலை விதிமுறைகள் பின்பற்றுவது மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து மாணவ, மாணவிய-ருக்கு, பள்ளி பருவத்தில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டியது நம் அனைவரது கடமை. இளைஞர்கள் இந்தியாவின் எதிர்காலம். இந்திய இளைஞர்களின் சக்தியை கருத்தில் கொண்டு, வெளிநாடு-களில் இருந்து அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு-கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இளைஞர்களை, ஆக்கப்பூர்வமான முறையில், எதிர்காலத்தில் நல்ல பண்பு உள்ள-வர்களாக மாற்ற வேண்டியது ஆசிரியர்களாகிய உங்களது உன்னத பொறுப்பு,'' என்றார்.தொடர்ந்து, உயர்கல்வித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்-புணர்வு கையேட்டை, கலெக்டர் உமா வெளியிட்டார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், உணவு பாதுகாப்-புத்துறை நியமன அலுவலர் அருண், நாமக்கல் கவிஞர் ராம-லிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு, ஆர்.டி.ஓ.,க்கள் முருகேசன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை