காளியம்மன் கோவிலில் பாம்புகள் நடனம்
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, காளியம்மன் கோவிலில் பாம்புகள் நடனமாடின. ராசிபுரம், நாமக்கல் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே, ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில், பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே புதர்கள் அதிகம் உள்ளன. நேற்று மாலை புதரில் மஞ்சள் மற்றும் கருப்பு சாரை பாம்புகள் இணைந்து நடனமாடியதால், கோவிலுக்கு வந்த பக்தர்கள், பொதுமக்கள் பயத்துடன் பார்த்து சென்றனர். அரை மணி நேரம் கழித்து, பாம்புகள் சென்றுவிட்டன.