உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ராசிபுரம், ஜன. 2- ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின், புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டு அதன் பதவியேற்பு விழா நடந்தது.சம்மேளன துணைத்தலைவர் சங்கர்லால் தலைமை வகித்தார். தொடர்ந்து, 3வது முறை தலைவராக பொறுப்பேற்கும் ஜெயபிரகாஷ் மற்றும் செயலாளர் ஜெகன் சேட், பொருளாளர் பாஸ்கர், துணை தலைவர்கள் வெங்கடாசலம், நந்தலால், துணை செயலாளர்கள் முருகேசன், செல்வகுமார், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர், பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு, முன்னாள் தலைவர் தாஜ்முகம்மது, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், முன்னாள் எம்.பி., சின்ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை