வரும் 5ல் டாஸ்மாக் கடை விடுமுறை
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:வரும், 5ல் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு, தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் முழுமையாக மூடி வைக்க வேண்டும். விதிகளை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.