உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மழையால் விற்பனை சரிவு தக்காளி விலை உயர்வு

மழையால் விற்பனை சரிவு தக்காளி விலை உயர்வு

ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று தக்காளி கிலோ, 48, கத்தரி, 48, வெண்டை, 45, புடலை, 38, பீர்க்கன்காய், 65, பாகல், 56, சுரைக்காய், 20, பச்சை மிளகாய், 28, சின்ன வெங்காயம், 60, பெரிய வெங்காயம், 80, முட்டைகோஸ், 30, கேரட், 90, பீன்ஸ், 70, பீட்ரூட், 70 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம், 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி, நேற்று, 48 ரூபாய்க்கு விற்பனையா-னது குறிப்பிடத்தக்கது. வாழைப்பழம், 40, கொய்யா, 45, பப்-பாளி, 20, தர்பூசணி, 20, எலுமிச்சை, 55, விலாம்பழம், 40 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று ஒரே நாளில், 139 விவசாயிகள் தங்களது விளை பொருட்-களை விற்க கொண்டு வந்திருந்தனர். 13,680 கிலோ காய்கறி, 5,560 கிலோ பழங்கள், 270 கிலோ பூக்கள் என மொத்தம், 19,510 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 8.68 லட்சம் ரூபாய் ஆகும். 4,170 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். நேற்று காலை முதல் தொடர் மழையால், வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து விற்பனை சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ