உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாயி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

விவசாயி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

ப.வேலுார், ராசிபுரம் அருகே, மலவேப்பங்கொட்டையை சேர்ந்தவர் கார்த்திக். 35. இவரது மனைவி நித்யா, 30. இவர்களுக்கு 13, 10 வயதில் மகன், மகள் உள்ளனர். பரமத்தி அருகே ஒழுகூர்பட்டியில் உள்ள தோட்டத்தில், குடும்பத்துடன் தங்கி விவசாய வேலை பார்த்து வந்தனர். கார்த்திக் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார்.கடந்த, 28ம் தேதி இரவு 11:00 மணிக்கு குடி போதையில் வந்த கார்த்திக், மனைவி நித்யாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். இது குறித்து தன் தந்தை ராஜேந்திரனுக்கு மொபைலில் நித்யா தகவல் தெரிவித்துள்ளார். அங்கு சென்ற ராஜேந்திரன், இவரது மனைவி ராசாத்தி, இவர்களது மகன் வீரமணி, அதே பகுதியை சேர்ந்த சவுந்தர் ஆகியோர் கார்த்திக்கை சமாதானப்படுத்த முயற்சித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த கார்த்திக், மாமனார் ராஜேந்திரனை தாக்கியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், ராசாத்தி, நித்யா ஆகிய மூவரும் சேர்ந்து கார்த்திக்கை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த கார்த்திக் மயங்கினார். இதையடுத்து மைத்துனர் வீரமணி, இவரது நண்பர் சவுந்தர் சேர்ந்து கார்த்திக்கை உயிர் போகும் வரை கழுத்தை நெரித்து உள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்ஆனால் குடிபோதையில், கார்த்திக் இறந்ததாக உறவினர்களுக்கு தெரிவித்து, உடலை எரிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் கார்த்திக் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட உறவினர்கள், நித்யா பெற்றோர் ராஜேந்திரன், ராசாத்தியிடம் வாக்கு வாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் கார்த்திக்கை கட்டையால் அடித்ததை ஒப்புக்கொண்ட ராஜேந்திரன் குடும்பத்தினர், நஷ்டஈடாக பெருந்தொகை கொடுப்பதாக கூறினர். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த கார்த்திக் பெற்றோர், பரமத்தி போலீசில் புகாரளித்தனர்.விசாரணையில் கார்த்திகை அடித்ததாக ராஜேந்திரன், ராசாத்தி மற்றும் நித்யா ஒப்புக்கொண்டனர். நேற்று முன்தினம் மூவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையில் கார்த்திகை உயிர் போகும் வரை கழுத்தை நெரித்ததாக நித்யா சகோதரன் வீரமணி, சவுந்தர் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி