உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர்கள் மோதி விபத்து; மரம் ஏறும் தொழிலாளி பலி

டூவீலர்கள் மோதி விபத்து; மரம் ஏறும் தொழிலாளி பலி

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, ராமாபுரம் அண்ணமார் நகரை சேர்ந்தவர் பெரியசாமி, 50; மரம் ஏறும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், 'ஜுபிடர்' டூவீலரில் மோர்பாளையத்திற்கு புரோட்டா வாங்க சென்றார். நாதன்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த, 'ஸ்பிளன்டர்' டூவீலர் நேருக்குநேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பெரியசாமி உயிரிழந்தார். மேலும், எதிரே வந்த பருத்திப்பள்ளியை சேர்ந்த வினோத்குமார் மற்றும் அவரது உறவினர் ராணி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். வினோத்குமார் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையிலும், ராணி நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ